முளைகட்டிய ராகி : ஒரு கப்
தேங்காய் : கால் கப்
இஞ்சி : ஒரு சிறிய துண்டு
பட்டை : ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் : 8
பொட்டுகடலை மாவு
உப்பு தேவைக்கேற்ப
மஞ்சூரியன் செய்ய
எண்ணெய் : ஒரு கரண்டி
சர்க்கரை ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் : ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு : ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு ஸ்பூன்
பெரியதாக நறுக்கிய வெங்காயம்
குடமிளகாய்
சோயா சாஸ்
சில்லி சாஸ்
உப்பு தேவைக்கேற்ப
அரைக்க :
முளைகட்டிய ராகியுடன் தேங்காய், இஞ்சி, பூண்டு, பட்டை , கிராம்பு, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். அத்துடன் உப்பும் பொட்டுகட்லை மாவும் சேர்த்து கெட்டியான வடை மாவு பதத்தில் கலந்துவைக்கவும்.
எப்படி செய்வது
வாணலில் எண்ணெய் விட்டு சர்க்கரையை சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் குடமிளகாய் சேர்த்து வதக்கவும், அத்துடன் சாஸ் வகைகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து, ராகி உருண்டைகளை போட்டு கிளறவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்
குறிப்பு : ராகி உருண்டைகளை வேக வைத்ததும் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தும் கொழுக்கட்டை போல் சாப்பிடலாம்
2 கருத்துகள்:
thinai adhirasam seivathu yepadi yena sollunga plz
thinai adhirasam seivathu yepadi yena sollunga plz
கருத்துரையிடுக
நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?