Kodo millet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kodo millet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

வரகு தம் பிரியாணி


என்னென்ன தேவை
வரகரிசி : 2கப்
கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிப்ளவர், உருளைகிழங்கு- பொடியாக நறுக்கியது : ஒன்றரை கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் : அரைகப்
பொடியாக நறுக்கிய தக்காளி : கால் கப்
எலுமிச்சம்பழ ஜூஸ் :  ஒரு பெரிய ஸ்பூன்
எண்ணெயும் நெய்யுமாக சேர்த்து : கால் கப்
ம.தூள் : அரை ஸ்பூன்
மிளகாய்தூள்: ஒரு ஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப
உப்பு: தேவையான அளவு
தண்ணீர் :மூன்றரை கப்
தயிர் : ஒரு பெரிய ஸ்பூன்

அரைக்க :

பட்டை : ஒரு பெரிய துண்டு
கிராம்பு : 3
புதினா, கொத்தமல்லி தழை : சிறிது
இஞ்சி : பெரிய துண்டு
பூண்டு : 7 (தோலுடன்)


தாளிக்க

பிரியாணி இலை : ஒன்று
பட்டை : ஒரு சிறிய துண்டு
கிராம்பு : இரண்டு



எப்படி செய்வது
வரகரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்
அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும் நெய்யுமாக உள்ளதில் பாதி ஊற்றி தாளிப்பு பொருட்கள் போடவும்
வெங்காயத்தை சேர்த்து  வதக்கவும், வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து கிளறி காய்கறிகளை சேர்க்கவும், இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும்
தக்காளி உடையாமல் கிளறி தயிர், ம.தூள், மிளகாய்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்
நன்கு வதங்கிய காய்களில் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் உப்பும் எலுமிச்சம் பழ ஜூஸ்ஸும் சேர்த்து பிறகு அரிசியை போடவும்.
பெரிய தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை குறைத்து சிம்மில் 15 நிமிடம் வைக்கவும். இடையில் இரு முறை மீதமிருக்கும் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  அரிசி உடையாமல் கலந்துவிட வேண்டும்.
இப்போது முக்கால் பதம் வெந்திருக்கும். இனி தம் போடும் முறை.

தம் போடும் முறை
பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரிதணல் போடலாம்
எரிதணல் கிடைக்காதவர்கள் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்
அல்லது சூடான குக்கரை கூட வைக்கலாம். அதிகபட்சம் 10 நிமிடங்கள் போதும்.
இறுதியாக பிரியாணியை சிறிது நெய்விட்டு ஒரு  முறை கிளறி தயிர் பச்சடி, உருளைகிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்

குறிப்பு
பிரியாணி செய்முறையில் இது எளிய முறை, குக்கரில் வைத்தால் குழைந்து கட்டியாகிவிடும். அதே அளவு நேரத்தில் தம் பிரியாணி செய்துவிடலாம்.
தண்ணீரின் அளவு என்பது பொதுவாக ஒன்றுக்கு இரண்டு இருக்கும், ஆனால் உதிராக பிரியாணி வரவேண்டும் எனில் மொத்த அளவில் அரைகப் குறைத்தால் போதும்
புதினா, கொத்தமல்லி அரைத்து விடுவதால் குழந்தைகள் அதை ஒதுக்குவதை தவிர்க்கலாம்.
அதிக மசாலாவாசனை பிடித்தமானவர்கள் ஏலக்காய் கூட தாளிப்பில் சேர்க்கலாம்

திங்கள், ஏப்ரல் 08, 2013

மில்லட் அவல் உப்புமா



என்னென்ன தேவை
வரகு அவல் : அரை கப்
சோள அவல் : அரை கப்
பட்டாணி : கால் கப்

வெங்காயம் : கால் கப்
பச்சை மிளகாய் : 6
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு சிறு துண்டு

எலுமிச்சம் பழ ஜூஸ் : ஒரு பெரிய ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
தண்ணீர் தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் : ஒரு பெரிய குழிகரண்டி
கடுகு : அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு : ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை : சிறிது



எப்படி செய்வது

அவல்களை ஒரு முறை சாதாரண தண்ணீரில் மண் போக கழுவவும். லேசான சுடு நீரில் 5 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி அவலை உதிர்த்து வைக்கவும்
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வதங்கியதும் பட்டாணி மஞ்சள் தூள், எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து குறைந்த தணலில் 3 நிமிடம் வதக்கிய பின் அவல் சேர்க்கவும். நன்றாக கிளறிவிடவும்.   தேங்காய் கிளறி சட்னியுடன் பரிமாறவும்

குறிப்பு

தேங்காய், புளி,  மிக்ஸ் வெஜ் உப்புமாக்களும் இதே முறையில் செய்யலாம், விரும்பினால் சிறிது வேர்க்கடலை பொடித்து போடலாம்.