வியாழன், ஏப்ரல் 04, 2013

வரகு பொங்கல்




 
என்னென்ன தேவை

வரகரிசி : 1 கப்
பயத்தம் பருப்பு : அரைகப்
தண்ணீர் : 4 கப்
பச்சை மிளகாய் : 5 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி : ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு : தேவையான அளவு

தாளிக்க :
நெய்யும் எண்ணெயுமாக சேர்த்து : கால் கப்
கடுகு : ஒரு சிட்டிகை
உளுத்தம் பருப்பு : அரை ஸ்பூன்
முந்திரி : 8
சீரகம் : கால் ஸ்பூன்
மிளகு : அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது


எப்படி செய்வது
வெறும் வாணலியில் ப. பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்
அடுப்பை அணைத்து அந்த சூட்டில் வரகரிசியை போட்டு வறுக்கவும்
இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வாணலியில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி, கடுகு, உ.பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும். சூடான கொத்சு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு

மிளகை சிறிது பொடித்து சேர்த்தால் மணமும் காரமும் கூடும். குக்கரில் நேரடியாக வைப்பதை விட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேகவைத்தால் அடிபிடிப்பதை தவிர்க்கலாம்.




2 கருத்துகள்:

ரோகிணிசிவா சொன்னது…

Thanks for a good recipe,Viji is.
kothusu recipe would have made this post complete

ரோகிணிசிவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?