ஞாயிறு, மார்ச் 23, 2014

போஹ்ரி கிச்சடி / Bohri kichadi










போஹ்ரி கிச்சடி
என்ன தேவை
வேகவைத்த பாசுமதி சாதம் : ஒரு கப்
வேக வைத்த துவரம் பருப்பு : ஒரு கப்
போஹ்ரி மசாலா செய்ய தேவையானவை
 அரைக்க :
பூண்டு : 5 பல்
பெரிய வெங்காயம் : ஒன்று
சீரகம் : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 3
வரமிளகாய் ஃப்ளேக்ஸ் : ஒரு டி.ஸ்பூன் - இவை அனைத்தும் விழுதாக அரைக்கவும்
தாளிக்க

நீளவாக்கில் பெரிய வெங்காயம் : இரண்டு கப்
கரம் மசாலா தூள் : அரை டிஸ்பூன்
லோ ஃபேட் தயிர் கால் கப்
உப்பு : தேவையான அளவு
சர்க்கரை ஒரு சிட்டிகை
எண்ணெய் : ஒரு ஸ்பூன்
பால் : ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது
கடாயில் எண்ணெய் விட்டு ஒன்றரை கப் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவேண்டும். வறுத்த வெங்காயத்தை தனியே எடுத்து வைக்கவும்
அதே கடாயில் மீதி வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்.
விழுது கெட்டியானவுடன் தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியான க்ரேவி பதத்தில் செய்யவும்.

போஹ்ரி செட் செய்ய
சாதம் மற்றும் பருப்பை ஒன்றாக உப்பு சேர்த்து கலக்கவும்.
எண்ணேய் தடவிய ஒரு ட்ரேயில் வறுத்த வெங்காயம் சிறிது பரவலாக தூவவும்
பாதி சாத பருப்பு கலவையை பரப்பவும்
போஹ்ரி க்ரேவியை சாதத்தின் மேல் பரவலாக பரப்பவும்
மீதி சாதத்தை க்ரேவி மேல் பரப்பவும்
மீதமுள்ள வெங்காயத்தை தூவவும்
பாலை மேலே பரவலாக ஊற்றவும்

ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் 5 நிமிடம் 180 டிகிரியில் வைத்து எடுத்து  பரிமாறவும்
*அவன் இல்லாவிட்டால் இதே போன்று செட் செய்யவும், நன்று இறுக்கமாக செட் பண்ணவேண்டும். இட்லி பானையில் சிறிது வைத்து எடுக்கலாம். செட் பண்ண மட்டுமே சூடு படுத்துகிறோம். பாலுடன் சிறிது குங்குமப்பூ சேர்க்கலாம்.

 

செவ்வாய், ஜனவரி 21, 2014

திருவையாறு அசோகா அல்வா

 
 
என்ன தேவை
பாசிபருப்பு(பயற்றம் பருப்பு) : ஒரு கப்
கோதுமை மாவு :  ஒரு கப்பிற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் குறைவாக எடுக்கவும்
மைதாமாவு : இரண்டு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை : மூன்று கப்
நெய் : ஒன்றரை கப்
ஏலக்காய் பொடி : கால் டேபிள் ஸ்பூன்
முந்திரி : 50 கிராம்
திராட்சை : 20  கிராம்
ஆரஞ்சு கேசரி பவுடர் : ஒரு சிட்டிகை

எப்படி செய்வது :

கோதுமைமாவுடன் மைதா மாவை சேர்த்து சலித்து வைக்கவும்

பாசி பருப்பை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து கழுவி வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேகவிடவும்
இன்னொரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நெய்யை விட்டு அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்
அந்த நெய்யில் கோதுமை மைதா மாவுகலவையை சேர்த்து வறுக்கவும், நிதானமான தீயில் கைவிடாமல் கிளறி வறுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாவு பொன்னிறமாகி நன்கு வாசனை வரும்
இந்த பதத்தில் வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும் போது சர்க்கரையையும் கேசரி பவுடரையும் சேர்த்து  கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரம் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும் ஏலக்காய் பவுடரும் மீதமுள்ள நெய்யும் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அசோகா அல்வா சிரமமின்றி தயார்.

கவனிக்க வேண்டிய குறிப்புகள்
மைதாவிற்கு பதில் சர்க்கரை சேர்த்தாத கோவா சேர்க்கலாம்
கைவிடாமல் கிளறவேண்டும் என்பது எல்லா வகையான அல்வாக்களுக்கும் பொதுவானது. கட்டிதட்டாமல் இருக்கவே கிளறிவிடவேண்டும்
ஆரஞ்சு கேசரி பவுடர் முற்றிலும் தனிப்பட்ட விருப்பத்திற்கானது. அதனை தவிர்த்தாலும் சுவையில் குறையாது